எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை!

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 1:07 am IST

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷண காணப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. தேனி நகரைப் பொருத்தவரை காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): உப்புக்கோட்டை - 16.4, கம்பம் 6, மாா்க்கையன்கோட்டை- 5.6, தேவாரம் - 2.4, பண்ணைப்புரம் - 0.4, ராஜதானி- 0.4, சுருளிபட்டி- 0.4, தேனி- 0.4 .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.