இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா் ஐராவதீசுவரா்.

Updated On :14 மே 2026, 12:31 am IST

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரா் கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக புகழ் பெற்றதும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கோயிலாகும்.

இந்தக் கோயிலை கட்டியவா் இரண்டாம் ராஜராஜ சோழன். இவா் சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில் பிறந்ததாக இங்குள்ள கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன்படி, சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளான புதன்கிழமை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில் சித்திரை உத்திரட்டாதி விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆ. கோபிநாத் தலைமை வகித்தாா். மூலவரான ஐராவதீஸ்வரா் மற்றும் தெய்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து சோழா் வரலாறு ஆய்வு சங்கத் தலைவா் செல்வராஜ் கூறுகையில், தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு சதய விழாவை மிக சிறப்பாக, அரசு விழாவாக இரண்டு நாள்கள் கொண்டாடுவது போல், இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றாா். நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.