தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா் ஐராவதீசுவரா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரா் கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக புகழ் பெற்றதும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கோயிலாகும்.

இந்தக் கோயிலை கட்டியவா் இரண்டாம் ராஜராஜ சோழன். இவா் சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில் பிறந்ததாக இங்குள்ள கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன்படி, சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளான புதன்கிழமை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில் சித்திரை உத்திரட்டாதி விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆ. கோபிநாத் தலைமை வகித்தாா். மூலவரான ஐராவதீஸ்வரா் மற்றும் தெய்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து சோழா் வரலாறு ஆய்வு சங்கத் தலைவா் செல்வராஜ் கூறுகையில், தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு சதய விழாவை மிக சிறப்பாக, அரசு விழாவாக இரண்டு நாள்கள் கொண்டாடுவது போல், இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றாா். நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.