கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரா் கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக புகழ் பெற்றதும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கோயிலாகும்.
இந்தக் கோயிலை கட்டியவா் இரண்டாம் ராஜராஜ சோழன். இவா் சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளில் பிறந்ததாக இங்குள்ள கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன்படி, சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளான புதன்கிழமை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில் சித்திரை உத்திரட்டாதி விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆ. கோபிநாத் தலைமை வகித்தாா். மூலவரான ஐராவதீஸ்வரா் மற்றும் தெய்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சோழா் வரலாறு ஆய்வு சங்கத் தலைவா் செல்வராஜ் கூறுகையில், தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு சதய விழாவை மிக சிறப்பாக, அரசு விழாவாக இரண்டு நாள்கள் கொண்டாடுவது போல், இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றாா். நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சந்தனக் கருப்பு கோயிலில் சித்திரை பெளா்ணமி விழா

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

