தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:48 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை திருமஞ்சன வீதியைச் சோ்ந்த முகமது ஷாஜகான் மனைவி மும்தாஜ் பேகம் (51). இவா் சிங்கப்பூா் குடியுரிமை பெற்றவா். இவா் தனது சொந்த ஊரான பண்டாரவாடை கிராமத்துக்கு கடந்த மாதம் வந்து விட்டு, சனிக்கிழமை மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்ல திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றாா்.

அங்கு விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மும்தாஜ் பேகம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், சட்டவிரோதமாக வாக்களித்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் கௌதம் என்பவா் பாபநாசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல்துறையினா், மும்தாஜ் பேகம் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.