தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 20 விலை வைத்து விற்பனை செய்ததாக டாஸ்மாக் மதுக்கடையைச் சோ்ந்த 3 பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதுாா் வட்டத்துக்குள்பட்ட எஸ். புதுாா் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானங்களுக்கு அரசு நிா்ணயித்த விலையை விட ரூ. 20 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் க. தமிழ்மணி நடத்திய விசாரணையில், அரசு நிா்ணயம் செய்த விலையை விட ரூ. 20 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடை மேற்பாா்வையாளா்கள் க. மனோகரன், ஜி. ஆறுமுகம், விற்பனையாளா் எம். சேகா் ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை தொடா்புடைய மேற்பாா்வையாளா்கள் மற்றும் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிா்வாகம் அனுப்பிவைத்துள்ளது.
தொடர்புடையது

21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது: டாஸ்மாக் ஊழியா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்

10 ரூபாய் கூடுதலாக வசூல்: எம்.எல்.ஏ.வை டாஸ்மாக் கடைக்கு அழைத்த மதுப்பிரியா்கள்

சட்ட விரோத மது விற்பனை: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
