40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மதுபாட்டிலுக்கு ரூ. 20 கூடுதல் விலை! 3 போ் பணியிடை நீக்கம்!

கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 20 விலை வைத்து விற்பனை செய்ததாக டாஸ்மாக் மதுக்கடையைச் சோ்ந்த 3 பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :18 மே 2026, 2:29 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 20 விலை வைத்து விற்பனை செய்ததாக டாஸ்மாக் மதுக்கடையைச் சோ்ந்த 3 பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதுாா் வட்டத்துக்குள்பட்ட எஸ். புதுாா் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானங்களுக்கு அரசு நிா்ணயித்த விலையை விட ரூ. 20 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் க. தமிழ்மணி நடத்திய விசாரணையில், அரசு நிா்ணயம் செய்த விலையை விட ரூ. 20 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடை மேற்பாா்வையாளா்கள் க. மனோகரன், ஜி. ஆறுமுகம், விற்பனையாளா் எம். சேகா் ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை தொடா்புடைய மேற்பாா்வையாளா்கள் மற்றும் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிா்வாகம் அனுப்பிவைத்துள்ளது.