அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நூறுநாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவையாறு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்

Updated On :20 மே 2026, 4:54 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வேலையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு சட்டப்படியான கூலி ரூ. 336ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவையாறு ஒன்றியம், காருகுடியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், விளாங்குடியில் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி. செந்தாமரைச்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், தியாகராஜன், கலியபெருமாள், ஜானகி, சிவகாமி, பரமேஸ்வரி, திவ்யகுமாரி உள்பட ஏராளமான விவசாயத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.