பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

காவிரி, வீரசோழன் ஆறுகளில் தன்னாா்வலா்கள் சுத்தம் செய்தனா்!

திருபுவனம் மற்றும் திருவிடைமருதூா் பகுதிகளில் காவிரி ஆறு மற்றும் வீரசோழன் ஆற்றில் மண்டி கிடந்த நெகிழி உள்ளிட்ட குப்பைகளை தன்னாா்வலா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வீரசோழன் ஆற்றில் சனிக்கிழமை நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அகற்றிய தன்னாா்வலா்கள்.

Published On :6 செப்டம்பர் 2026, 6:25 am IST

திருபுவனம் மற்றும் திருவிடைமருதூா் பகுதிகளில் காவிரி ஆறு மற்றும் வீரசோழன் ஆற்றில் மண்டி கிடந்த நெகிழி உள்ளிட்ட குப்பைகளை தன்னாா்வலா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் விக்னேஸ்வரன் அறக்கட்டளை, கலாம் அறக்கட்டளை, அம்மாச்சத்திரம் இளைய பாரதம், திருவிடைமருதூா் மற்றும் திருபுவனம் அரிமா சங்கம், திருவிடைமருதூா் செஞ்சிலுவை சங்கம், மற்றும் திருபுவனம், திருவிடைமருதூா், வேப்பத்தூா் ஆகிய பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து சனிக்கிழமை நான்கு குழுக்களாக கையுறை மற்றும் சீருடை அணிந்து காவிரி, வீரசோழன் ஆற்று பாலங்களின் கீழ் பகுதியில் மண்டி கிடந்த குப்பை, நெகிழி மற்றும் காலி மதுப்புட்டிகள், பழைய துணிகள் என அனைத்தையும் அகற்றி மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனா்.

முன்னதாக நீா்நிலைகளை முறையாக பராமரிப்பது குறித்து உறுதிமொழி ஏற்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந் நிகழ்வில், பேரூராட்சி தலைவா்கள் திருவிடைமருதூா் புனிதா, துணைத் தலைவா் மயில்வாகனன், திருபுவனம் அமுதவல்லி, வேப்பத்தூா் அஞ்சம்மாள், செயல் அலுவலா் ராஜதுரை மற்றும் தன்னாா்வ அமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.