யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முடியை சீராக்கும் கருவிக்குள் மறைத்து  மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டரூ. 7 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து பயணி ஒருவரால் முடியை சீராக்கும் கருவிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:07 am

DIN

மலேசியாவிலிருந்து பயணி ஒருவரால் முடியை சீராக்கும் கருவிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து  புதன்கிழமை காலை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  
இதையடுத்து அதிகாரிகள், விமானப் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பெண் பயணி மீரா என்பவர், தலைமுடியை சீராக்கும் (ஹேர் ஸ்ட்ரைக்ட்)கருவிகளுக்குள் 230 கிராம்  தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.