வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை சித்ரா பௌர்ணமியையொட்டி நம்பெருமாள் எழுந்தருளி யானைக்கு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:24 am

DIN

ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை சித்ரா பௌர்ணமியையொட்டி நம்பெருமாள் எழுந்தருளி யானைக்கு (கஜேந்திரன்) விமோசனம் அளிக்கும் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 7.30-க்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டப ஆஸ்தான மண்டபத்தை 10.30-க்கு அடைந்தார். பின்னர் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரியாற்றிற்குள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 
அப்போது யானை ஆண்டாள் (கஜேந்திரன்) நம்பெருமாளை நோக்கி 3 முறை பிளிறியது. பின்னர் நம்பெருமாள் அருகில் வந்து யானைக்கு சந்தனம், சடாரி வைத்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர். அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 6.45-க்கு திருவூரல் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். இரவு 8.15-க்கு புறப்பட்டு 9.15-க்கு மூலஸ்தானத்தை அடைந்தார் நம்பெருமாள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.