மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 27 லட்சம் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:27 am

DIN

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவிலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  இருவரது உடைமைகள் இருந்த பெட்டியில் மர்மப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.  இதில்,  சென்னையைச் சேர்ந்த  சர்புதீன்அலி என்பவர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 341 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருந்தார். மேலும், சென்னையைச் சேர்ந்த ஜமாலுதீன் என்பவர் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள  289 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்திருந்தார்.
அதேபோல், சிங்கப்பூரிலிருந்து வந்த விமானப் பயணிகளை சோதனை மேற்கொண்டதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பால்பீட்டர் என்பவர் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.