ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முருகூரில் சிறப்பு மனு நீதி முகாம்

துறையூர் வட்டம் முருகூரில் சிறப்பு மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:24 am

DIN

துறையூர் வட்டம் முருகூரில் சிறப்பு மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு  துறையூர் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் தலைமை வகித்தார்.  சமூக பாதுகாப்பு நல தனி வட்டாட்சியர் சிவசங்கரன், மண்டலத் துணை வட்டாட்சியர் பெ. மோகன்  முன்னிலை வகித்தனர்.
பட்டா பெயர் மாற்றம், உழவர் பாதுகாப்பு அட்டை, முதியோர் உதவி தொகை, தையல் இயந்திரம், வாரிசு சான்று கோரி 162 பேர் மனு அளித்தனர். இதில் 118 மனுக்கள் உடனடி தீர்வுக்கு ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற மனுக்கள் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  
முன்னதாக, வருவாய் ஆய்வர் வி. கௌரி வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் பிரபு நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.