ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

இளையோர் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: டிஐஜி லலிதா லட்சுமி

இளையோர் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி.

Updated On :29 மார்ச் 2018, 1:35 am

இளையோர் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் 48-ஆவது கல்லூரி தினவிழா  புதன்கிழமை நடைபெற்றது.  இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் மேலும் பேசியது:
கல்வி கற்பதற்கான சிறந்த தளமாக திருச்சி நீண்ட காலமாக விளங்கி வருகிறது. இங்கு கல்வி கற்றவர்கள் மிகப்பெரிய பதவிகளில் வகித்துள்ளனர்.   நேர்வழியில் பெறும் வெற்றியே நிலைத்திருக்கும். கடமையைச் சரியாக செய்யும் நபர்களுக்கு மட்டுமே உரிமையைப் பற்றி பேசும் அதிகாரமுண்டு. படிப்பு முடிந்தபின் விருப்பமான துறையில் பணியை தேர்வு செய்வது மிக முக்கியம்.  உங்களைப்போன்ற இளையோர் நினைத்தால் எத்தகு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் பத்மா ராமகிருஷ்ணன், முதல்வர் ஈ. கிறிஸ்டி செல்வராணி, முனைவர்கள் சிவக்குமார், வீரமணி, இந்திராகுமாரி,  பிரதீபா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியோருக்கு விருது மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.  மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.