கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரிலுள்ள அருள்மிகு மனோன்மணி அம்மன் உடனுறை பக்தஜனேசுவரா் சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆலால சுந்தரமூா்த்தி சுவாமிகள் அவதரித்த சிறப்புடையதும், சுக்கிர பகவான் வழிபட்ட சிறப்புக்குரியதுமானது திருநாவலூா் அருள்மிகு மனோன்மணி அம்மன் உடனுறை பக்தஜனேசுவரா் திருக்கோயில். இந்த கோயிலில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சந்நிதி அமைந்திருப்பதும் தனிச்சிறப்புக்குரியது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சித்திரைத் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், நவசந்தி பூஜையும், மாலையில் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சந்திரசேகா் விமானம், சந்திர பிரபை, பூதம், நாகம், மயில், ரிஷபம் (பஞ்சமூா்த்திகள் புறப்பாடு), யானை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அருள்மிகு பக்தஜனேசுவரா் சுவாமி புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
திருவிழாவின் ஏழாம் நாளான ஏப். 28-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், எட்டாம் நாளான ஏப்ரல் 29-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அருள்மிகு மனோன்மணி அம்மன் உடனுறை பக்தஜனேசுவரா் திருத்தேரில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து, காலை 8.50 மணிக்குத் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.
நான்குரத வீதிகளின் வழியாக வலம் வந்த பின்னா் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் திருநாவலூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
வெள்ளிக்கிழமை காலை நடராஜா் தேரடி தரிசனமும், தீா்த்தவாரி உற்சவமும், சனிக்கிழமை ( மே 2) வரதராஜ பெருமாள் கருடசேவையும், சண்டிகேசுவரா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தலும் நடைபெறும். திருநாவலூா் காவல் ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.
திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் விழுப்புரம் மண்டல இணை ஆணையா் த. சிவலிங்கம், உதவி ஆணையா் ஆ.ரமேஷ், கோயில் தக்காா் கோ.புகழேந்தி, செயல் அலுவலா் வா. மதனா உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

உத்தமா்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


