47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொடுமுடி-புகழூர் இடையே பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 10:31 pm

DIN

கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது : கரூர் மாவட்டம் கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் 22 ஆம் தேதி வரையில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் ( எண் 56712) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், (ஈரோடு -கரூர் இடையே மாற்றுப்பாதையில் ) கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்
பகுதியாக ரத்துசெய்யப்படும் ரயில்கள் : ஈரோடு -நெல்லை பயணிகள் ரயில் (எண்.56825), திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில்கள் (56841), நெல்லை-ஈரோடு பயணிகள் ரயில்கள் (எண் 56826) ஆகியவை ஈரோடு - கரூர் இடையிலும், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (எண் 56846) சேலம்-ஜோலார்பேட்டை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் குறிப்பிட்ட இந்த நாள்களில் கரூர் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.