போலி விசாவில் மூலம் மலேசியா செல்ல முயன்ற வேதாரண்யத்தைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமான நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் பிரபாகரன் (24). இவர், ஒரு முகவர் மூலம் மலேசியாவில் வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை அந்த முகவர் பெற்றுத் தந்துள்ளார். அதன்மூலம் பிரபாகரன், ஞாயிற்றுக்கிழமை மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் திருச்சி விமான நிலையம் வந்து, மலிண்டோ விமானத்தில் செல்ல காத்திருந்தார்.
அவரது பயண ஆவணங்களை பரிசோதித்த குடியேற்றப்பிரிவு போலீஸார், அவரது விசா போலியானது என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முகவர் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரனை திங்கள்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

