செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

போலி விசாவில் வெளிநாடு செல்ல முயன்ற இளைஞர் கைது

போலி விசாவில் மூலம் மலேசியா செல்ல முயன்ற வேதாரண்யத்தைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமான நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 10:32 pm

போலி விசாவில் மூலம் மலேசியா செல்ல முயன்ற வேதாரண்யத்தைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமான நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் பிரபாகரன் (24). இவர், ஒரு முகவர் மூலம் மலேசியாவில் வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை அந்த முகவர் பெற்றுத் தந்துள்ளார். அதன்மூலம் பிரபாகரன், ஞாயிற்றுக்கிழமை மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் திருச்சி விமான நிலையம் வந்து, மலிண்டோ விமானத்தில் செல்ல காத்திருந்தார்.
அவரது பயண ஆவணங்களை பரிசோதித்த குடியேற்றப்பிரிவு போலீஸார், அவரது விசா போலியானது என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முகவர் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரனை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.