திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 428 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, சாதி சான்று, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள், வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் அளித்த 428 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 13 பேருக்கு தலா ரூ.22,500 வீதம் இயற்கை மரண உதவித் தொகை, 4 பேருக்கு தலா ரூ.1,02,500 வீதம் விபத்து நிவாரணத் தொகை, ஒருவருக்கு விபத்து நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சம் என மொத்தமாக ரூ. 8.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. பஷீர், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

திமுக ஆட்சி அமைந்தால்தான் 100 நாள் வேலைத் திட்டம் தொடரும்: காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

