தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்விசை சைலா வீல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் 2016-17 ஆண்டுக்கான மழைக்கால பராமரிப்பு உதவித் தொகை பெற்ற 2,000 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு முதல்கட்டமாக மின்விசை சைலா வீல்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, மார்ச் 23 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி மற்றும் அரசு விழாவில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20,400 மதிப்பில் மின்விசை சைலா வீல்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை காதி கிராப்ட் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இந்த நிகழ்வில் பங்கேற்று சைலா வீல்களை வழங்கினார். நிகழ்வில், காதி கிராப்ட் மண்டலத் துணை இயக்குநர் என். மணிவாசகன், உதவி இயக்குநர் பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு

கேகேஆர் அணியில் இணைந்த பதிரானா..! பிளேயிங் லெவனில் விளையாடுவாரா?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

