மணப்பாறை அருகே பஜனை மடத்தில் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான 7 உலோகச் சிலைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டி கிராமத்தில் அக்ரஹாரம் தெருவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை மடம் உள்ளது. பழமையான இந்த மடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பஜனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, சனிக்கிழமை (நவ.3) இரவு பஜனை முடிந்து கதவுகள் மூடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்பகுதி மக்கள் மடத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மட நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கொழுமண்டபத்தில் இருந்த வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய 7 உலோகச் சிலைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி சூா்யா பிணை கோரிய மனு: போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை: சீனா

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துகள்: அறிக்கை கோருகிறது மத்திய அமைப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


