தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தடகளம்: அகிலாண்டேசுவரி வித்யாலயா சாம்பியன்

திருச்சியில் நடைபெற்ற மாவ ட்ட அளவிலான கிடிஸ் தடகளப் போட்டியில் திருவானைக்கா அகிலாண்டேசுவரி வித்யாலயா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:36 am IST

திருச்சியில் நடைபெற்ற மாவ ட்ட அளவிலான கிடிஸ் தடகளப் போட்டியில் திருவானைக்கா அகிலாண்டேசுவரி வித்யாலயா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
புனித ஜான் வெஸ்ட்ரி  பள்ளி முன்னாள் மாணவர்கள், விடார் டெக் பிரைவேட் லிமிடெட், திருச்சி மாவட்ட கிடிஸ் விளையாட்டு முன்னேற்றச் சங்கம் ஆகியவை இணைந்து அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அண்மையில் நடத்தின. 
திருச்சி மாவட்டத்திலுள்ள 34 பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,550 மாணவ, மாணவிகள் தடகளப் போட்டிகளில்  பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் 54 புள்ளிகளுடன் அகிலாண்டேசுவரி வித்யாலயாசி.பி.எஸ்.இ பள்ளி முதலிடத்தையும், 31புள்ளிகளுடன் வாகீஷ வித்யாஸரம் பள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றன. 
மாணவிகள் பிரிவில் 39 புள்ளிகளுடன் அகிலாண்டேசுவரி வித்யலாயா பள்ளி முதலிடத்தையும், 34 புள்ளிகளுடன் தூய வளனார் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன. மொத்தமாக  93 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை  அகிலாண்டேஸ்வரி பள்ளி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சர்வதேச தடகள வீரர் பிரான்சிஸ் சகாயராஜ், டாக்டர் சாமுவேல் பால் தேவகுமார், சங்கச் செயலர் ஆர். கருணாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.