திருச்சி அரசு மருத்துவமனை மாணவிகள் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பெருமாள்காரன்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி சுசீலா(24). இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி செவிலியர் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
இதை கண்ட பயிற்சி செவிலியர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?

இருங்காட்டுக் கோட்டையில் தனியாா் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


