இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

செவிலியர் தற்கொலை முயற்சி

திருச்சி அரசு மருத்துவமனை மாணவிகள் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:57 am IST

திருச்சி அரசு மருத்துவமனை மாணவிகள் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பெருமாள்காரன்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி சுசீலா(24). இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி செவிலியர் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார். 
இதை கண்ட பயிற்சி செவிலியர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.