இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து...

News image

ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :31 மே 2026, 6:22 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனெவே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெற்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியைக் காட்டிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே கோப்பையை வெல்லும் எனப் பலரும் கருதுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது சொந்த மண்ணான அகமதாபாதில் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளார்கள். அகமதாபாத் அவர்களது கோட்டையாக உள்ளதால், இறுதிப்போட்டியில் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் வலுவாக உள்ளது. அந்த அணியில் நடப்பு சீசனில் புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

அகமதாபாதில் விளையாடுவதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடுகளம் குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆர்சிபியைப் பொருத்தவரை, பந்துவீச்சு அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பலரும் ஆர்சிபி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் எனக் கூறும் அளவுக்கு அந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் அவர்கள் எப்படி விளையாடினார்களோ அதே போன்ற ஆட்டத்தை இறுதிப்போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் களமிறங்குகின்றன.

Summary

Regarding the ongoing IPL season—between Royal Challengers Bangalore and Gujarat Titans—which of these two teams has the greater chance of winning the championship title?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.