இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

News image

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

Updated On :31 மே 2026, 4:35 pm IST

ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.

இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருக்கிறார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்‌ஷர் படேலும் இம்பாக்ட் வீரர் விதி தனக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனிப்பட்ட முறையில் ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் எனக் கூறுவேன். டி20 வடிவிலான ஆட்டங்களில் ஒரு அணி 20 ஓவர்கள் மட்டுமே விளையாடப் போகிறது. ஒவ்வொரு அணியிலும் உள்ள பேட்டிங் வரிசையில் கூடுதலாக ஒருவர் இம்பாக்ட் வீரராக களமிறங்கினால், பந்துவீச்சாளர்களுக்கு அது மேலும் சவாலளிக்கும் விஷயமாக மாறுகிறது. ஏற்கனெவே பந்துவீச்சாளர்கள் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் இது மேலும் சவாலை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆட்டத்தின் சமநிலை தவறுவதாக நினைக்கிறேன் என்றார்.

Summary

Former Indian cricketer Sachin Tendulkar has stated that the 'Impact Player' rule in the IPL should be removed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.