ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வந்த தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை இரவு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெற்று வந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்ட விழா 20 ஆம் தேதி நடைபெற்றது.
நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.
விழாவின நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார். இதற்காக மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் 7.30-க்கு புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளினார். ஏராளமானோர் தரிசித்தனர்.
உள் திருவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தது, அங்கிருந்து புறப்பட்டு 9.45-க்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
