தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின் சுவாமிகள் வீதியுலா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின்

Updated On :23 ஜனவரி 2019, 8:11 am IST

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திங்கள்கிழமை அருள்மிகு முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.மதியம் தீர்த்தவாரிக்கு பிறகு சுவாமி, கீழவயலூர்,வடகாபுத்தூர் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதராக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தங்கச் சப்பரத்தில் சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை அருகில் வந்து சேர்ந்தார். அப்போது, உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை சமேத உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மசமுத்திரம் காசிவிசுவநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உறையூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய சுவாமிகள் ஒன்றாக சந்தித்து முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவனடியார்கள் பலரும் திருவாசகம் பாடியபடி சுவாமியுடன் வந்தனர்.பின்னர் சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டகப்படிக்கு வந்து தங்கினர். அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. அதன்பிறகு அனைத்து சுவாமிகளும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பிச் சென்றனர். வயலூர் சுப்பிரமணியசுவாமி அதவத்தூர் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து வீதியுலா வந்து புதன்கிழமை அதிகாலை வயலூருக்கு சென்றார்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்  ராணி தலைமையில் கோயில் செயல் அலுவலர் சுரேஷ், கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.