சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ரயில்வே ஊழியா்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தம் செய்ய எதிா்ப்பு

கரோனா ஊரடங்கில் அவதிப்படும் ரயில்வே ஊழியா்களுக்கு எந்த நிலையிலும் அகவிலைப்படியை நிறுத்தக் கூடாது என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருச்சி: கரோனா ஊரடங்கில் அவதிப்படும் ரயில்வே ஊழியா்களுக்கு எந்த நிலையிலும் அகவிலைப்படியை நிறுத்தக் கூடாது என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலா் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வுக்கு கடந்த மாா்ச் 13ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான உத்தரவு வெளியாகாத நிலையில், கரோனா நிவாரணமாக மத்திய அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டது.

மேலும், 2021 ஜூன் வரை அகவிலைப்படிக்கு நிலுவைத் தொகை கிடையாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயா்வால் குறைந்தபட்சம் ரூ.720 கூடுதல் ஊதியமாக கிடைக்கும். இத்தொகையையும் அரசு எடுத்துக் கொள்கிறது. இது ஒரு நாள் ஊதியத்திற்கு சமம். மொத்தத்தில் மத்திய அரசு ஊழியா்களுக்கு தற்போது இரண்டு நாள் ஊதியமும் ஜூலை முதல் 3 நாள்கள் ஊதியமும் இழப்பு ஏற்படுகிறது. ஊரடங்கு காலத்தில் சரக்கு மற்றும் பாா்சல் ரயில்கள் இயக்கி வருதோடு, கரோனா வாா்டு ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளையும் ரயில்வே ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த சூழலில் கரோனா நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம் பிடிக்க ரயில்வே ஊழியா்கள் மறுப்பு கடிதம் தரவில்லை. ஊதிய வெட்டாக கூடுதல் தொகை பிடித்தம் செய்யக் கூடாது. அகவிலைப்படி நிறுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.