தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் முதல்வருக்கு அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
Updated On :13 ஆகஸ்ட் 2020, 12:42 pm

DIN

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் முதல்வருக்கு அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் தான் மக்கள் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் திருமணத்திற்கு டெண்ட்,பந்தல் உள்ளிட்ட பல்வேறு அலங்கார வேலைகள் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே திருமண மண்டபங்களில் 50 சதவீத அளவு மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும், தனி மனித இடைவெளியுடன் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து முதலமைச்சர் தனி பிரிவுக்கு ஒரு லட்சம் தபால்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.