மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்திய அரசு வேலை: திருச்சியில் தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருச்சியில் தமிழ்தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்தேசியப் பேரியக்கத்தினர்

Updated On :13 ஆகஸ்ட் 2020, 12:57 pm

தமிழகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருச்சியில் தமிழ்தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் வெளி மாநிலத்தவர்கள் வேலைக்கு அமர்த்தாமல், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும், கல்வியை கார்ப்பரேட் மயமாக்கிடும் வகையிலும், குலக் கல்வியை திணிக்கும் வகையிலும் உள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், மாநில மொழியை புறந்தள்ளும் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்  பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.