பின்னர் செய்தியாளர்களுக்கு தா.பாண்டியன் அளித்த பேட்டியில், “சுதந்திரப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன், சுதந்திர வேட்கையுடன் போராடியது போன்று சுதந்திரத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருக்கிறோம். உள்நாட்டில் சுதந்திரப் போராட்டகாலத்திலும் துரோகிகள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். வெளிநாட்டு விரோதிகளை விட உள்நாட்டு துரோகிகள் ஆபத்தானவர்கள். நாட்டு மக்களை பிளவுபடுத்துவது, பிரிவுபடுத்துவது மற்றும் சுரண்டுவது, இழிவுபடுத்துவது என்றும் தங்கம், குட்கா, கஞ்சா என கடத்தலும் பொது முடக்க காலத்திலும் நடைபெறுகிறது.