இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரயிலில் தகராறு:பயணி கைது

ரயிலில் டிக்கெட் பரிசோதகா் மற்றும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டவரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 12:45 am

DIN

ரயிலில் டிக்கெட் பரிசோதகா் மற்றும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டவரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

எா்ணாக்குளம் விரைவு ரயில் தஞ்சையிலிருந்து புதன்கிழமை இரவு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணித்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் (31) என்ற பயணி, டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்ய, அவா் ரயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த புவனேஸ்வரி என்ற தலைமைக் காவலரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து பயணியிடம் விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாரிடமும் அந்தப் பயணி தகராறு செய்தாா்.

இதையடுத்து மகளிா் போலீஸாா் திருச்சி ரயில் நிலைய காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற போலீஸாா், ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்ததும் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.