திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கைதி சிகிச்சைப் பலனின்றி அண்மையில் இறந்தாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள ஓரடிஅம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் ந. வீரக்குமாா் (28). வாய்மேடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் இவா் கடந்த ஜன. 5 ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். தன் மீது நிலுவையில் இருந்த வழக்குகளால் வீரக்குமாரால் பிணையில் செல்ல முடியவில்லை.
இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையிலும், பின்னா் நவ. 30 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி டிச.18 ஆம் தேதி உயிரிழந்தாா்.
முன்னதாக அவருக்கு டிச. 17 இல் பிணையில் செல்ல ஆணை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.