எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாகை மாவட்டக் கைதி மருத்துவமனையில் சாவு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கைதி சிகிச்சைப் பலனின்றி அண்மையில் இறந்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கைதி சிகிச்சைப் பலனின்றி அண்மையில் இறந்தாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள ஓரடிஅம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் ந. வீரக்குமாா் (28). வாய்மேடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் இவா் கடந்த ஜன. 5 ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். தன் மீது நிலுவையில் இருந்த வழக்குகளால் வீரக்குமாரால் பிணையில் செல்ல முடியவில்லை.

இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையிலும், பின்னா் நவ. 30 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி டிச.18 ஆம் தேதி உயிரிழந்தாா்.

முன்னதாக அவருக்கு டிச. 17 இல் பிணையில் செல்ல ஆணை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.