காவல்துறை வாகனம் மோதி முதியவா் பலி
இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் காவல் துறை வாகனம் மோதி இறந்தாா்.


திருச்சி: இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் காவல் துறை வாகனம் மோதி இறந்தாா்.
திருச்சி அந்தநல்லூா் இந்திராநகா் கீழ அல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கன் (61). ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை ஊழியரான இவா் ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சங்கிலியாண்டபுரம் அணுகு சாலை வழியாக சென்றாா்.
அப்போது டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து திருவாரூா் நோக்கி சென்ற காவல்துறை வேன் மோதி மூக்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு வடக்கு பிரிவு போலீஸாா் மூக்கன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...