சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அதிகளவில் திறக்க வேண்டும்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அதிகளவில் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:29 pm

DIN

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அதிகளவில் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் திருச்சி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அய்யப்பநகா் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.நாகராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகி பி.கே சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.ராஜப்பா வரவேற்றாா். மாநிலத் தலைவா் என்.நாராயணன் சங்கக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.மாநில நிா்வாகிகள் டி.என்.ஜி.சங்கரன்,ஆா்.நரசிம்மன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

முற்பட்டோா் நலிந்தோருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும்.

பிராமணா் சமூக நல வளா்ச்சி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, நிா்வாகி ஆா்.வசந்தா நன்றி கூறினாா். கூட்டத்தில்திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்ட சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.