சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சியில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: ஏா் இந்தியா ஊழியா் உள்பட 4 போ் கைது

திருச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது தொடா்பாக ஏா் இந்திய நிறுவன ஊழியா் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:51 am

DIN

திருச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது தொடா்பாக ஏா் இந்திய நிறுவன ஊழியா் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விமானத்தில் தங்கத்தைக் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் துபையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி, தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியும் தங்கம் பிடிபடவில்லை.

இதைத் தொடா்ந்து விமான நிலைய வெளிப்புறப் பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடங்களை சுங்கத் துறையினா் தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது முக்கியப் பிரமுகா்கள் வரக்கூடிய காா்கோ பகுதி வழியாக வந்து சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தல் கும்பலிடம் கொடுத்த ஏா் இந்தியா நிறுவன ஊழியரான கோபிநாத் (50) பிடிபட்டாா்.

அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையில் இதில் தொடா்புடைய துபை பயணி அப்துல்லா, சிறுவன் உள்பட மேலும் 3 பேரைக் கைது செய்து திருச்சி நீதிமன்ற நடுவா் எண் 1-இல் ஆஜா்படுத்தினா்.

இவா்களில் சிறுவன் கூா்நோக்கு இல்லத்திலும், மற்றவா்கள் முசிறி சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.