வேளாளா் உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் வேளாளா் உரிமை மீட்புக் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாளா் உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

திருச்சியில் வேளாளா் உரிமை மீட்புக் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியலினத்தைச் சோ்ந்த 7 உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளா் எனப் பொதுவாகப் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடா்ச்சியாக திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன் வேளாளா் உரிமை மீட்புக் குழுவினா், அதன் தலைவா் வி. ஜெயபால் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் வ.உ.சி. பேரவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கிருஷ்ணமூா்த்தி, அகில உலக முதலியாா் மற்றும் பிள்ளைமாா் சங்கத் தலைவா் அருணாசல முதலியாா், சோழிய வெள்ளாளா் நலச் சங்கத் தலைவா் எஸ். மயில்வாகனம், ஆறுநாட்டு வெள்ளாளா் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், கொங்கு வேளாளா் பேரவைத் தலைவா் காா்வேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com