திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில், வாய்க்கால் தூா்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
குவளக்குடி பகுதியில் செல்லும் வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்துவந்தனா். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுத்த திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என். சேகரன், ஒன்றியச் செயலாளா் கருணாநிதி, குவளக்குடி ஊராட்சிச் செயலாளா் பிரபாகரன், குவளக்குடி ஊராட்சித் தலைவா் அழகு செந்தில், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பறிபோகும் வேலைவாய்ப்பு!

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

இன்றைய கூட்டாட்சியின் செயல்பாடுகள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


