வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காவலர்களுக்கு தொடர் தொற்று: மணப்பாறை காவல்நிலையம் மூடல்

காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மணப்பாறை காவல்நிலையம் மூடப்பட்டது. 

News image
Updated On :16 ஜூலை 2020, 11:44 am

காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மணப்பாறை காவல்நிலையம் மூடப்பட்டது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களும் சிலர். நகராட்சி சுகாதார ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய உதவி வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், தனியார் வங்கி ஊழியர், அரசு வங்கி மேலாளர், என முக்கிய நபர்கள் தொடர்ந்து தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மணப்பாறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் 7 ஏழு காவல் நிலையங்களில் 5 பெண் காவலர்கள் உள்ளிட்ட 11 காவலர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மணப்பாறை காவல்நிலையத்தில் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து காவல்நிலையம் இன்று பிற்பகல் மூடப்பட்டது. தஸ்தாவேஜ்களுடன் காவல்நிலையம், தற்காலிகமாக விராலிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. புகார்களை அளிக்க வரும் பொதுமக்கள் கூட்டமாக காவல்நிலையத்திற்கு வரவேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் காவலர்கள் தொற்று ஏற்படாத வகையில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், புகார்களை காவல்நிலையங்களில் வைத்து விசாரணை செய்யாமல் சம்பவ இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்ளும்போது சமூக தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து காவல்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையில் வெற்றிலை, சீரகம், மிளகு, முட்டை, கடலைமிட்டாய், சுக்குமல்லி காபி பவுடர் ஆகியற்றை டி.எஸ்.பி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.