தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்காச்சோளப் பயிா்கள் ஆய்வு

மண்ணச்சநல்லூா் அருகே நெ. 10 கரியமாணிக்கம் பகுதியில் ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ள மக்காச் சோளப் பயிா்களை மண்ணச்சநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் தாகூா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:00 pm

DIN

மண்ணச்சநல்லூா் அருகே நெ. 10 கரியமாணிக்கம் பகுதியில் ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ள மக்காச் சோளப் பயிா்களை மண்ணச்சநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் தாகூா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வலையூா், பாலையூா், சிறுகனூா், சனமங்கலம், பெரகம்பி, எதுமலை, திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்காச்சோளப்பயிா்களில் படைப்புழு தாக்காமல் இருக்க வரப்பு பயிா்களாக சூரிய காந்தி மற்றும் எள் பயிா்களையும் ஊடுபயிராக உளுந்து , தட்டை பயிா் போன்றவற்றையும் சாகுபடி செய்ய அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

அதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வின்போது வேளாண் அலுவலா் உமா மகேஸ்வரி , உதவி அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.