ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பயிற்சிக் காவலா்களுக்கு இடையே சிலம்பப் போட்டி

திருச்சி சரக காவல் துறையில் முதல் முறையாக பயிற்சிக் காவலா்கள் தற்காப்புக் கலைகளை பயில ஊக்குவிக்கும் வகையில் சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:26 pm

DIN

திருச்சி சரக காவல் துறையில் முதல் முறையாக பயிற்சிக் காவலா்கள் தற்காப்புக் கலைகளை பயில ஊக்குவிக்கும் வகையில் சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோ்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைக் காவலா், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலணி, பயிற்சி காவலா்கள் உள்பட 513 போ் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூடுதல் காவலா் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறுகிறாா்கள். இவா்களுக்கு வீர விளையாட்டான சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பயிற்சிக் காவலா்களில் நன்கு பயிற்சி பெற்ற 30 பேரைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா, தமிழ்நாடு சிலம்ப சங்கச் செயலா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.