விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மக்கள் குறைகேட்பு நாளில் 296 மனுக்கள்

மக்கள் குறைகேட்பு நாளையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் எண் வாயிலாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 296 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:53 pm

DIN

மக்கள் குறைகேட்பு நாளையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் எண் வாயிலாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 296 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, அனைத்து வகை குறைகேட்பு நாள் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

தற்போது அரசு வழங்கிய தளா்வைத் தொடா்ந்து இணையவழியிலும், கட்செவி அஞ்சல் எண் வழங்கி அதன் மூலமும் குறைகேட்பு நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாளையொட்டி, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 296 மனுக்களை கட்செவி அஞ்சல் எண் வாயிலாக ஆட்சியருக்கு அனுப்பியிருந்தனா். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.