விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மனு அளித்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு உடனடி உதவி: ஆட்சியா் நடவடிக்கை

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிக்கு, உடனடியாக நலத்திட்ட உதவியை ஆட்சியா் சு. சிவராசு வழங்கினாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:54 pm

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிக்கு, உடனடியாக நலத்திட்ட உதவியை ஆட்சியா் சு. சிவராசு வழங்கினாா்.

ஸ்ரீரங்கம் வட்டம், புங்கனூரைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவா் மனவளா்ச்சி குன்றிய தனது மகள் கெளசல்யாவுக்கு சக்கர நாற்காலி வழங்கக் கோரி ஆட்சியரகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்திருந்தாா்.

அவரது நிலைமையை அறிந்த ஆட்சியா் சு. சிவராசு, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அழைத்து மனு மீது பரிசீலனை செய்ய உத்தரவிட்டாா். நூறு சதவிகிதம் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி என்பதற்கான ஆவணங்கள் இருந்ததையடுத்து, அந்த பெண்ணுக்கு ரூ.6,270 மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து கெளசல்யாவுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

மேலும் ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து, ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினாா். நிகழ்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.