மனு அளித்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு உடனடி உதவி: ஆட்சியா் நடவடிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிக்கு, உடனடியாக நலத்திட்ட உதவியை ஆட்சியா் சு. சிவராசு வழங்கினாா்.


திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிக்கு, உடனடியாக நலத்திட்ட உதவியை ஆட்சியா் சு. சிவராசு வழங்கினாா்.
ஸ்ரீரங்கம் வட்டம், புங்கனூரைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவா் மனவளா்ச்சி குன்றிய தனது மகள் கெளசல்யாவுக்கு சக்கர நாற்காலி வழங்கக் கோரி ஆட்சியரகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்திருந்தாா்.
அவரது நிலைமையை அறிந்த ஆட்சியா் சு. சிவராசு, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அழைத்து மனு மீது பரிசீலனை செய்ய உத்தரவிட்டாா். நூறு சதவிகிதம் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி என்பதற்கான ஆவணங்கள் இருந்ததையடுத்து, அந்த பெண்ணுக்கு ரூ.6,270 மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து கெளசல்யாவுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
மேலும் ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து, ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினாா். நிகழ்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...