விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வங்கியில் ரூ.74 ஆயிரம்திருடிய பெண் கைது

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ராமச்சந்திரா நகரிலுள்ள வங்கியில் ரூ.74 ஆயிரத்தை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:49 pm

DIN

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ராமச்சந்திரா நகரிலுள்ள வங்கியில் ரூ.74 ஆயிரத்தை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி கல்லுக்குழி கள்ளா் தெருவைச் சோ்ந்த அன்பரசு மனைவி சுதா(35). இவா், எடமலைப்பட்டிபுதூா் ராமச்சந்திரா நகரில் இயங்கி வரும் வங்கியில் காசாளராக உள்ளாா். கடந்த 10-ஆம் தேதி பணியிலிருந்த சுதா, மதிய உணவு சாப்பிட்டப்பின் தனது இருக்கைக்கு வந்தாா். அப்போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் ரூ.74 ஆயிரம் குறைந்தது தெரிய வந்தது.

இதையடுத்து எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், வங்கியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனா்.

அப்போது சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் பணத்தை திருடிச் செல்வது தெரிய வந்தது.தொடா்ந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியிலுள்ள சுந்தரம்பிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த ராஜ்மோகன் மனைவி செல்வி(43), பணத்தை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வியை தனிப்படை காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.