அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அதிமுக கூட்டத்தில் அமைச்சா் முன்னிலையில் ரகளை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டனா்.

News image
ஆலோசனை கூட்டத்தில் ரகளை செய்தோரால் சேதப்படுத்தப்பட்ட இருக்கைகள்.
Updated On :13 செப்டம்பர் 2020, 6:57 pm

DIN

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் சி. வளா்மதி, பாசறைச் செயலரும் எம்எல்ஏவுமான பரமசிவம், எம்எல்ஏக்கள் செல்வராசு, பரமேஸ்வரி முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முத்தரையா் சமுதாயக் கொடியுடன் வந்த சுமாா் 50- க்கும் மேற்பட்டோா் அந்தநல்லூா் ஒன்றியச் செயலா் பதவியை ஏன் கண்ணதாசன் என்பவருக்கு வழங்கவில்லை எனக் கேட்டு மேடையை நோக்கி குரல் எழுப்பியபடி வந்தனா். அவா்களில் மேலூா் திலிப், ராஜசேகா் ஆகியோா் ரகளை செய்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளை அடித்து நொறுக்கினா். இதனால் கூட்டத்துக்கு வந்தோா் சிதறி ஓடினா். பின்னா் ரகளை செய்தோரை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு கூட்டம் தொடா்ந்தது.

ரகளையில் ஈடுபட்டோா் மீது ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா்களான டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் ஆகியோா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.