விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் 'கேடயம்' செயல் திட்டம் தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற செயல் திட்டம் திருச்சியில் இன்று தொடங்கப்பட்டது. 

News image

கேடயம் செயல் திட்டத்தை மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) ஜெயராமன் துவக்கி வைத்தார்.

Updated On :21 செப்டம்பர் 2020, 8:05 am

திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற செயல் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. 

திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை, மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) ஜெயராமன் தொடக்கி வைத்தார். சரக டிஐஜி ஆனி விஜயா, டிஆர்ஓ பழனிக்குமார், எஸ்பிக்கள் திருச்சி ஜெயசந்திரன், கரூர் பகலவன், அரியலூர் சீனிவாசன், புதுக்கோட்டை பாலாஜி சரவணன், பெரம்பலூர் நிஷா பார்த்திபன் இதில் பங்கேற்றனர். 

இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். திட்டத்தின் ஒரு பகுதியாகத் திருச்சி சரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றச் செயல்களின் தரவுகளைச் சேகரித்து அதில் மிகத் தீவிரத்தன்மை கொண்ட ஆறு குற்றங்களை கண்டறிவது மட்டுமில்லாமல் அதிகமாகக் குற்றங்கள் நடைபெறும் 25 இடங்களை அடையாளம் காணப்படும்.

மேலும் இக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே உள்ள அச்சத்தைப் போக்க சமூகக் காவலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இச்செயல் திட்டம் நான்கு நிலைகளாக வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.