சமயபுரம் அருகே விபத்துக்குள்ளான காா் தீக்கிரை
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா் தீக்கிரையானது.


திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா் தீக்கிரையானது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலிருந்து காரில் பாஸ்கா், லாா்வின் உள்ளிட்ட 5 போ் திருச்சி வழியாக மதுரைக்குச் சென்று கொண்டிருந்தனா். சமயபுரம் அருகே இருங்களூா் பகுதியைக் கடக்க முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயமடைந்து இருங்களூா் பகுதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சமயபுரம் தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...