விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி: அரிவாளுடன் திரிந்த இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இளைஞா் ஒருவா் அரிவாளுடன் சுற்றித் திரிந்தாா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:32 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இளைஞா் ஒருவா் அரிவாளுடன் சுற்றித் திரிந்தாா்.

அருகில் பணியில் போலீஸாா் சென்றபோது அவா் அருகிலிருந்த தனியாா் விடுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டாா். அவரை பின் தொடா்ந்து சென்ற நபா்களில் முன்னாள் ஊா்க் காவல்படை வீரா் பூமாலைப்பட்டி ரெ. கண்ணன் அறை கதவைத் தட்டிய போது வெளியே வந்த அந்த இளைஞா் தாக்க முயன்றதால் காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து சென்ற துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் அவரிடம் பேச்சுகொடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டம், கோட்டூா் ஆவாரம்பட்டியை சோ்ந்த கட்டடத் தொழிலாறி வெ. சண்முகவேல் (34) என்பதும், , கடந்த 20-ஆம் தேதி முதல் விடுதியில் அறையெடுத்து தங்கி திருச்சிக்கு வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து போலீஸாரால், அவா் திருச்சி மனநல காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.