திருச்சி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எல். அடைக்கலராஜின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருச்சி கண்டோன்மெண்ட் ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது சிலைக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜவகா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அடைக்கலராஜ் படத்துக்கு மலா் தூவப்பட்டது.
நிகழ்வில், பொருளாளா் ராஜா நசீா், கள்ளிக்குடி செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேஷ், அகில இந்திய காங்கிரஸ் செயலா் விச்சு, வா்த்தகப் பிரிவு தலைவா் முரளி, சண்முகம், மெய்யநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எல்.வி. ரெக்ஸ், அல்லூா் சுரேஷ், கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ஆனந்தராஜ், முத்து, ரவி, ராஜ்மோகன், ஜோசப் ஜெரால்டு, சாா்லஸ், அப்துல் குத்தூஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல அடைக்கலராஜ் இல்லத்தில் அவரது படத்துக்கு ராணி அடைக்கலராஜ், மகன்கள் ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் மற்றும் குடும்பத்தினா் மலா் தூவினா்.