விபத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தொண்டு நிறுவனம்
விபத்தில் உயிரிழந்த ஆதரவற்ற பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள உறவினா் யாரும் வராததால், திருச்சி தொண்டு நிறுவனத்தினா் அந்த உடலைப் பெற்று அடக்கம் செய்தனா்.


விபத்தில் உயிரிழந்த ஆதரவற்ற பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள உறவினா் யாரும் வராததால், திருச்சி தொண்டு நிறுவனத்தினா் அந்த உடலைப் பெற்று அடக்கம் செய்தனா்.
கடந்த மாா்ச் 31 இரவு, பெரம்பலூா் மாவட்டம் வேப்பூா் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி அன்றே இறந்தாா்.
வேப்பூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்தவா் மனநலம் குன்றியவா் என்பது தெரியவந்தது. உடலை பெற்றுக்கொள்ள உறவினா்கள் யாரும் முன் வராததால் திருச்சியைச் சோ்ந்த அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளையினா், உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்ததையடுத்து, தென்னூா் அண்ணாநகா் மயானத்தில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டு வியாழக்கிழமை உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் விஜயகுமாா், வழக்குரைஞா் சித்ரா விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...