காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள சாம் கரணுக்குப் பதிலாக இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்தார். அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தனர்.
இருப்பினும், காயம் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சாம் கரண் தொடரிலிந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மாற்று வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
From the shores of Lanka to Rajasthan, this all-rounder is now ouRRs! ðð¥
— Rajasthan Royals (@rajasthanroyals) March 23, 2026
Padhaaro mhare des, Dasun Shanaka ð±ð° pic.twitter.com/OY1iPsMHjZ
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாம் கரணுக்குப் பதிலாக ரூ. 2 கோடிக்கு இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக இணையவுள்ளார். இலங்கை அணிக்காக தாசுன் ஷானகா 6 டெஸ்ட், 71 ஒருநாள் மற்றும் 131 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 3350 ரன்கள் மற்றும் 86 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதாகும் தாசுன் ஷானகா கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்று மூன்று போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Summary
Sri Lanka captain Dasun Shanaka has been named as a replacement for Sam Karan, who has been ruled out of the IPL due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் குரலை ஒடுக்க ஐடி விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு கேஜரிவால் குற்றச்சாட்டு

குருவாயூா் - சென்னை ரயில் ஆக.12-இல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்
ஜந்தா் மந்தருக்கு பதிலாக மாற்று போராட்ட இடம்: மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

3-வது ஒருநாள்: வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!




