
இலங்கை வீரர் சோனல் தினுஷாவைப் பாராட்டிய கௌதம் கம்பீர்!
இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷாவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

இலங்கை வீரர் சோனல் தினுஷா - படம் | AP
இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷாவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தது. அதனை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார் இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதிவரைப் போராடிய இந்திய அணியின் மன வலிமையை பாராட்டுவதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Test cricket needs character, patience and mental toughness thatâs shown by our boys! Special shoutout to Sonal Dinusha for his exceptional performance! pic.twitter.com/zu8pNKt5pU
— Gautam Gambhir (@GautamGambhir) August 28, 2026
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம். இவை அனைத்தையும் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா மிகவும் அற்புதமாக விளையாடினார் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 100 ரன்கள் மற்றும் 84 ரன்கள் குவித்த சோனல் தினுஷா, இரண்டாவது டெஸ்ட்டில் 103 ரன்கள் மற்றும் 133* ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team head coach Gautam Gambhir has praised young Sri Lankan player Sonal Dinusha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






