தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

4 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கடும் எதிா்ப்பு: விவசாயிகள் சங்கத்தினா்முற்றுகைப் போராட்டம்

அந்தநல்லூா் ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாயிகள்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:05 pm

DIN

அந்தநல்லூா் ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சியானது 4 கோட்டங்களையும், 65 வாா்டுகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியுடன் மாநகர எல்லைகளுக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சிகளையும் இணைத்து 100 வாா்டுகளாக மாநகராட்சியை விரிவாக்கும் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம மக்களும் தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆட்சியரகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அந்தநல்லூா் ஒன்றியப் பகுதிகளான மல்லியம்பத்து, மருதண்டக்குறிச்சி, முத்தரசநல்லூா் மற்றும் கம்பரசம்பேட்டை கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க உத்தேசித்துள்ளதைக் கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க அந்தநல்லூா் ஒன்றியக் குழு சாா்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் சங்கா், மாவட்டச் செயலா் தங்கதுரை, மாவட்டத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் பேசினா். சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், செந்தில்குமாா், இளவரசன், செல்வமணி, நடராஜன், சித்ரா, அஜிதாபேகம் உள்பட 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு, ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் அவா்கள் மனுக்களை அளித்தனா்.

கிராம மக்களுக்கான திட்டங்கள் பறிபோகும்

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், கிராம ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க தமிழக அரசுக்கு திருச்சி மாநகராட்சியிலிருந்து முன்மொழிவு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிராம மக்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது கிராம மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சியோடு கிராம ஊராட்சிகளை இணைப்பதால் சமூக நலத் திட்டங்கள், உழவா் பாதுகாப்புத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டம் ஆகியவை பறிபோகும் அபாயம் உள்ளது.

இத் திட்டங்களால் பயன்பெற்று வந்த கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். மேலும் வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீா் வரி உள்ளிட்ட எல்லா வரிகளும் பல மடங்கு உயரும்.

மத்திய, மாநில அரசுகளின் இலவச வீடு கட்டித்தரும் திட்டமும் புறக்கணிக்கப்படும். இதனால் கிராமப்புறப் பகுதிகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

ஏற்கெனவே மாநகராட்சியில் இணைந்த கிராமங்களில் இதே நிலைதான் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. எனவே, அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள் வரும் கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது. இல்லையெனில், தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.